Monday, 7 August 2017

சாளுவன் குப்பம்

விடுமுறை என்றாலே ஊர் சுத்துவது வழக்கம் சிலருக்கு, எனக்கு சொல்லவே வேண்டாம். சென்னையில் உள்ள பாக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள இடங்களை பார்வையிட ஒரு வாய்ப்பு கிடைத்தது.

காலையில் கிளம்பி ECR வழியாக சென்றோம். சென்னையில் வசிக்கும் ஒரு ஜீவனுக்கு மகாபலிபுரம் கண்டிப்பாக புதிதாக இருக்காது, முக்கியமாக இளமை ரவுசுகள் பெருபாலும் அரங்கேற்றம் அடைவது கிழக்கு கடற்கரையில் தான்.
நேராக மகாபலி புரம் தான் செல்கிறோம் என்று நினைத்த போது வண்டி ஊருக்கு ஐந்து கிலோமீட்டர் முன்னாடியே நின்றது, ஓ புலிக்குகையா என நினைத்தேன். ஆனால் நண்பர்கள் கூட்டி சென்றது வேறு ஒரு இடம்.பச்சை கலர் வேலியை கண்ட உடனே தொல்லியல் துறையின் கீழ் உள்ளது என்பது புரிந்தது.

என்னை முதலில் கவர்ந்தது அந்த பனைமரம்(படம் கீழே). எப்போதும் பனையின் மேல் எனக்கு தீராத காதல் உண்டு. அந்த ஊரின் பெயர் சாளுவன் குப்பம். நான் பார்த்துக்கொண்டிருப்பது சங்க கால முருகன் கோவில் என நண்பர்கள்  சொன்னதும் பழமை என்னை உப்புக்காற்றால் நனைத்தது. உப்பு பண்டம் கெட்டு போகுமோ?

தேடலே பயணங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும். மகாபலிபுரம், ஆலம்பரை, வெடால் என பல ஊர்கள் சென்று பயணம் முடிந்தது. ஆனால் சாளுவன் குப்பம் பற்றி அறிந்து கொள்ள மேலும் மேலும் ஆசை.

முருகன் கோவில்.

பல காலமாக மண்ணில் புதைந்து இருந்த முத்து ஆழிபேரலையில் மீண்டும் கண்ணில் பட்டது. ஆங்காங்கே தெரிந்த கல்வெட்டுகளில் பல்லவர் கால கட்டுமானம் இருப்பது தெரிந்தது. சங்க காலத்தில் இருந்த கோவிலின் மேலே பல்லவர்கள் கோவில் கட்டியுள்ளனர். தற்போது முற்றிலும் சிதைந்த நிலையில் தான் உள்ளது. சங்க இலக்கியங்களில் அறியப்படும் நீர்பெயற்று துறைமுகம் இதுவாக இருக்கலாம் என எண்ணினாலும் அதற்க்கான சான்றுகள் நம்மிடம் இல்லை. சாளுவன் குப்பத்தின் முந்தைய பெயர் திருவீழ்ச்சில் என்று கல்வெட்டு செய்திகள் மூலம் அறியலாம். கோவிலுக்கு அளித்த கொடைகள் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. முதலாம் ராஜராஜனின் கல்வெட்டுகளும் இங்கே நாம் காணலாம்.
மேலும் தமிழ்நாட்டில் காணப்படும் சங்க கால கோவில்கள் இரண்டுதான் அதில் இதுவும் ஒன்று. மற்றொன்று வேப்பத்தூர் பெருமாள் கோவில்.

புலிக்குகை சென்று பார்ப்பவர்கள் பெரும்பாலும் இதை கவனிப்பதே இல்லை, 2000 ஆண்டு தொன்மை ஆழமான அஸ்திவாரத்துடன் நமக்காக காத்து நிற்கிறது.

கோவிலின் உள்ளே உள்ள பாறை 


கோவிலில் கண்ட பனைமரம் 

கோவிலின் முழு தோற்றம்

நண்பர் வேலுசாமி 



No comments:

Post a Comment

தும்பல்

பேளூர் அடுத்து நாங்கள் சென்ற இடம் தும்பல். கல்ராயன் மலையின் கிழக்கு பக்கத்தில்  அமைந்துள்ள ஊர் தும்பல்.  அங்கே உள்ள அரசு மருத்துவமனைக்கு அர...