பேளூர் அங்காளம்மன் கோவில்.
இந்த வாரம் (12-8-2017) சேலத்தை நோக்கிய ஒரு பயணம், இரவு 12 மணிக்கு பெருங்களத்தூரில் பேருந்தை பிடித்து சேலத்துக்கு கிளம்பியாச்சு. காலை ஏழு மணிக்கு வேலுசாமி சாருடன் வாழப்பாடி சென்று அங்கிருந்து குளித்து கிளம்பி, வாழப்பாடியில் காலை உணவை முடித்து பேளூர் நோக்கி பயணத்தை தொடங்கினோம்.
பேளூர் நோக்கி செல்லும் போதே இருபுறமும் மலைகளை காணலாம். இவ்வூர் பத்தாம் நூற்றாண்டில் சோழர்களின் நேரடி ஆட்சியில் இருந்திருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமான இடம் பேளூருக்கு உண்டு. இங்கு பல கல்வெட்டுகளும், நடுகற்களும் காணலாம். வாழப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் பேளூர் உள்ளது. பேளூரை அடுத்து அறுநூத்து மலை உள்ளதால் இயற்கை எழில் பொங்கும் இவ்வூரில், நான் பனைமரமே பார்க்காத ஊர் பேளூர். இங்கு உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் மிகவும் பிரபலமானது.
பேளூர் நோக்கி செல்லும் போதே இருபுறமும் மலைகளை காணலாம். இவ்வூர் பத்தாம் நூற்றாண்டில் சோழர்களின் நேரடி ஆட்சியில் இருந்திருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமான இடம் பேளூருக்கு உண்டு. இங்கு பல கல்வெட்டுகளும், நடுகற்களும் காணலாம். வாழப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் பேளூர் உள்ளது. பேளூரை அடுத்து அறுநூத்து மலை உள்ளதால் இயற்கை எழில் பொங்கும் இவ்வூரில், நான் பனைமரமே பார்க்காத ஊர் பேளூர். இங்கு உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் மிகவும் பிரபலமானது.
பேளூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் 948ம் ஆண்டை சேர்ந்த முதலாம் பராந்தகன் கல்வெட்டு உள்ளது. கல்வெட்டில் சில பகுதிகள் மட்டுமே கிடைக்க பெறுகிறது.
கல்வெட்டு கூறும் செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி என தொடங்குவதால் இது முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு என அறியப்படுகிறது.ஆத்தூரில் உள்ள நரசிங்கபுரம் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு பகலில் விளக்கு எரிய தானம் கொடுத்த செய்தியை கூறுகிறது.
![]() |
| அங்காளம்மன் கோவில் கல்வெட்டு |
மூக்கறுப்பு கல்வெட்டு
பேளூர் அங்காளம்மன் கோவிலுக்கு எதிரிலேயே நாம் மூக்கறுப்பு கல்வெட்டை காணலாம். மிகவும் முக்கியமான கல்வெட்டாக இது கருதப்படுகிறது. மீசையுடநே மூக்கறு ப்பிச்சார் என்னும் வாசகத்தை இக்கல்வெட்டில் நாம் காணலாம.
திருமலை நாயக்கருக்கும் மைசூர் மன்னர் கந்திருவ நரச ராஜாவுக்கும் நடந்த போரை பற்றிய குறிப்புகளை இந்த கல்வெட்டு தருகிறது. கெம்பையா என்பவன் மன்னரின் உத்தரவுப்படி வழியில் எதிர்ப்பட்ட ஆண்,பெண்,குழந்தைகள் என அனைவரின் மூக்கையும் அறுத்து ஒரு சாக்குப்பையில் போட்டு மைசூரு அனுப்பி வைத்தாக தகவல் உள்ளது. மீசையோடு வந்தால் அதிக வெகுமானம் தரப்பட்டுள்ளது.
திருமலை நாயக்கருக்கும் மைசூர் மன்னர் கந்திருவ நரச ராஜாவுக்கும் நடந்த போரை பற்றிய குறிப்புகளை இந்த கல்வெட்டு தருகிறது. கெம்பையா என்பவன் மன்னரின் உத்தரவுப்படி வழியில் எதிர்ப்பட்ட ஆண்,பெண்,குழந்தைகள் என அனைவரின் மூக்கையும் அறுத்து ஒரு சாக்குப்பையில் போட்டு மைசூரு அனுப்பி வைத்தாக தகவல் உள்ளது. மீசையோடு வந்தால் அதிக வெகுமானம் தரப்பட்டுள்ளது.
![]() |
| மூக்கறுப்பு கல்வெட்டு |
![]() |
| கல்லின் இன்னொரு பக்கம் |
இதன் பின்னர் ராமநாதபுரம் சேதுபதி மற்றும் ஏனைய பாளையக்காரர்கள் உதவியுடன் திருமலை நாயக்கர் மைசூர் படைகளை விரட்டி அடித்தார்.
A Voyage to the East India என்ற நூலில் ஜெ ஹெச் குரோஸ் என்பவர் மைசூர் படையின் தனித்துவமாக இந்த மூக்கறுப்பு இருந்தது என்றும் மூக்கறுப்பதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள் என்றும் கூறுகிறார். இப்போர் குறித்து இதுவரை கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் இது கண்டுபுடிக்கப்பட்டது.
![]() |
| கல்வெட்டின் கிழக்குப் புறம் |
![]() |
| மேற்கு பகுதி |






No comments:
Post a Comment