பேளூர் அடுத்து நாங்கள் சென்ற இடம் தும்பல். கல்ராயன் மலையின் கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ள ஊர் தும்பல். அங்கே உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் உள்ளது.
கீழே உள்ள படம் பற்றி இன்னும் ஆய்வுசெய்ய படவில்லை. ஆணும் பெண்ணும் நடந்து செல்வது போலவும், ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவும் உள்ளது. சிதைந்த நிலையில் உள்ளது.
 |
| ஆய்வு செய்யப்பட வேண்டிய கல் |
குத்துக்கல் போல காணப்படும் இந்த கல்லை சுற்றி கல்வட்டங்கள் காணப்படுகிறது. இதுவும் ஒரு பெருங்கற்கால ஈம சின்னம் என்பது தெரிகிறது.
 |
| குத்துக்கல்லாக இருக்கலாம் |
கல்வட்டங்கள்
கல்வட்டங்கள் ( Cairn circle ) நம் முன்னோர்களின் நினைவிடங்கள். உலகம் முழுக்க ஒரே மாதிரியான கல்வட்டங்களை காணலாம். இதன் மூலம் நாம், உலகம் முழுக்க ஒரே இனக்குழுவில் இருந்து தொடங்கியது என்பதை அறியலாம்.
நவீன கடவுள்கள் தென்பகுதிக்குள் நுழையும் முன்பு முன்னோர்களை கடவுளாக வணங்குவதே வழக்கத்தில் இருந்தது. இன்று இவைகளில் பெரும்பாலானவை நமக்கு முழுதாக கிடைப்பது இல்லை. காரணம் இதை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.
 |
| கல்வட்டங்கள் |
தும்பல் மருத்துவமனை அருகே அதிக அளவிலான கல்வட்டங்களை நாம் காணலாம். கல்வட்டங்கள் அளவினை உள்ளே நிற்பவரை வைத்து கணக்கிட்டு கொள்ளலாம்.
 |
| தெளிவாக தெரியும் கல்வட்டம் |
 |
பாதி மட்டுமே காணப்படும் கல்வட்டம்.
|
No comments:
Post a Comment